Wednesday, September 26, 2018

குறும்பாக் கலாட்டா


        குறும்பாக் கலாட்டா      

(ஆங்கிலத்தில் உள்ள 'Limerick" என்னும் செய்யுள் வகையை ஒட்டி அமைந்த ’குறும்பா’ என்னும் பாடல் வகை பற்றியும் அதன் இலக்கணத்தைப் பற்றியும் உள்ள எனது கட்டுரையைச் ‘சந்தவசந்தம்’ இணையத் தளத்தில் காணலாம்: https://groups.google.com/d/msg/santhavasantham/6FwMI45is0M/-rk3eYoncFcJ 


1. அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில்
ஆனைமுகன் வெற்றிக்கொடி நாட்டி
…. அகிலமெல்லாம் சுற்றுவதை
…. அன்னைதந்தை சுற்றுவதால்
அடைந்திடலாம் என்றான்வழி காட்டி

2. போட்டியிலே தோற்றதனால் வெம்பி - மனம்
போனபின்னர் மாற்றுவழி நம்பி 
…. அண்ணனுக்கு முன்னதாக
…. ஆற்றுமொரு செய்கையென்று
புரிந்துகொண்டான் இருமணத்தைத் தம்பி!

3. கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன்
காலெடுத்து ஆடுவதோ காடு 
…. அன்னவன்மேல் மையல்கொண்டு 
…. அருகமர்ந்தாள் அம்மைஅவள்
காதலுக்கு வேறெதுதான் ஈடு?

4. அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை
அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை
அக்கினிக்கு சொன்னதைஅப்
…. பக்கம்வந்த வருணன் கேட்க
…. அவன்பிடித்தான் நாரதரின் சிண்டை!

5. பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது
ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்
பார்த்தஅன்னை கையில்அவன் காது!

6. கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு
…. கல்விகற்கும் காலமெல்லாம்
…. கண்டபடி போக்கினாலும்
கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு! (-அது
கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!!)

7. காட்டினிலே சுற்றிவந்த வள்ளி
காலமெல்லம் மனத்தினிலே உள்ளி
…. வேட்டுவனாய் வந்தவன்மேல்
…. நாட்டமில்லா நங்கையைப் போல்
காட்டியபின் கைப்பிடித்தாள் கள்ளி!

8.. வாசலிலே வந்தவனைப் பார்த்தேன்
வடிவழகன் பட்டியலில் சேர்த்தேன்
…. பாசிமணி விற்கஅன்று
…. பரபரத்த முகத்தைஇன்று
காசையள்ளும் திரைப்படத்தில் பார்த்தேன்! 

9. வானத்திலே பறந்துவந்த சிட்டு - அதன்
மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு
…. மேல்நிமிர்ந்து  பார்த்துப்பிறர்
…. மேலிடித்து  நடக்கையிலே
வாயினிலே விழுந்ததொரு சொட்டு!

10. வாசலிலே வந்ததொரு மாடு - அது
வாலெடுத்து ஆட்டக்குஷி யோடு
…. நானதனை ரசித்தபடி
…. நடந்துசெல்ல நல்லவெள்ளைச்
சட்டையிலே கெட்டசாணிக் கோடு!

11. தொட்டிலிலே தூங்குமெந்தன் குட்டி
தொடாமலே இனிக்கும்வெல்லக் கட்டி
…. கட்டவிழ்ந்த  ஆசையோடு
…. கிட்டநின்று  காணவாயில்
விட்டதய்யா நீரையந்தச் சுட்டி!

12. மாடிவீட்டில் இன்றுவாழும் வள்ளி
மாடுமேய்த்து முன்னையநாள் சுள்ளி
... ஓடிச்சேர்த்த அழகினிலே
... ஓர்நடிகர் விழஅவரை
நாடிவந்தாள் திரையுலகில் துள்ளி!

13. முன்பொருநாள் முருகன்என்ற பேரார்
முதியர்அவர் நூல்எதையும் பாரார்
…. தன்அறிவு மங்கிவரும்
…. தருணமதில் இங்கிவர்தான்
இன்றுமுதல் 'ப்ரொபஸர்' என்றார் ஊரார்!

14. பாடகரின் தொண்டைகொஞ்சம் மட்டு - அதைப்
பாராதவர் மேல்ஸ்ருதியைத் தொட்டுப்
…. பாடஅந்த வேதனையைத்
…. தாளாராக தேவதைதான்
போட்டதவர் தலையில்ஒரு குட்டு!

15. உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்
..... அண்டியென்னை ஏதோஒன்று
..... அணைத்ததது யாரோவென்று
கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!

16. ஆருமில்லா நேரமாகப் பார்த்து
ஆறுவருட ஆசையினைத் தீர்த்து
....... பேரனது ஊஞ்சலிலே
....... பெருங்களிப்போ(டு) ஆடையிலே
பார்அடைந்தேன் மாரெலும்பைப் பேர்த்து!

17. கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
..... அவியலுடன் ரசமும்வைத்து
..... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!

18. மங்களத்தின் மாமனொரு குண்டன்
வசிப்பதற்கு வந்தடைந்தான் லண்டன்
....... இங்கிலாந்துத் தீனிதின்று
....... இவன்பெருத்த மேனிஇன்று
தங்கும்'கின்னஸ் புக்'கில்;எம கண்டன்!

19. வாருமையா அருகினில்வந் துட்காரும்
வந்துமது கேஸ்விவரம் கூறும்
.. யாருமக்குச் சாதகமாய்ச்
.. சேருவரோ நேருவது
நேருமென நம்பிஊர்போய்ச் சேரும்
சேரும்முன்னம் எனதுஃபீஸைத் தாரும்.

20. காலையிலும் மாலையிலும் குறும்பா
கழிந்தமற்ற நேரமெல்லாம் எறும்பாய்
.... வேலைசெய்யும் வேளையிலும்
.... வேண்டுமென்றே மூளையினோர்
மூலையிலே சிரிக்குமது குறும்பாய்!

குறும்பா மகிமை

குறுமுனிவர் தந்ததமிழ்க் கடலில்
.கோடிகோடி அலைகளுக்கு இடையில்
…. குறும்பனெனக் காட்டிக்கொண்டு
…. குதிநடனம் போட்டுக்கொண்டு
குறும்பாவொன்(று) அலையக்கண்டோம் நடுவில்.

ஆங்கிலத்தில் 'லிமெரிக்'கென்று செய்தான்
அழகுமுண்டு பொருளுமுண்டு மெய்தான்
…. ஆங்கிலாத மோனைநலம்
…. ஆக்கிஎங்கள் மொழியின்பலம்
ஓங்குகுறும் பாவையிங்கு நெய்தான்! 

குறும்பாவைக் கொண்டுவந்தான் மூர்த்தி*
கொண்டேன்நான் அதில்மிகவும் ஆர்த்தி
... வெறும்பாவாய் ஆங்கிலத்தில்
…. விளங்கியதை ஓங்குமொரு
நறும்பாவாய் நமக்களித்தான், நேர்த்தி!
(*ஈழக்கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி)









பாட்டுக்கு மெட்டு

பாட்டுக்கு மெட்டு
அனந்தநாராயணன் (கானடா)

 

(இது, ‘கட்டுரைகள் ‘ தளத்தில் காண்பதன் மறு பதிவு.)
  சென்னை நகரில் அமர்க்களமாக இசை விழா நடந்து கொண்டிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில்பல்வேறுவகையான இசை நிகழ்ச்சிகளில்சாகித்ய கர்த்தாக்கள் என அழைக்கப்படும் பாடல் புனைபவர்களின்பாடல்களைப் பற்பல பாடகர்கள் பாடிக் காட்டுவதையும்நாட்டியக் கலைஞர்கள் ஆடிக் காட்டுவதையும்மக்கள் திரள்திரளாகச் சென்று கேட்கும் காட்சி என் கண்முன் விரிகிறதுபல ஆண்டுகளாகநானும்உலகில் வேறெங்கும் இத்தனை பெரிய அளவில் நடைபெறாத இந்த இசைவிழாவைக் கண்டுகேட்டுமகிழச் சென்றுள்ளேன் (இடையில்பல காண்டீன்களில் நாவார உண்டு மகிழ்வதும் உண்டு!)அப்பொழுதெல்லாம் என் மனத்தில்அழகழகாகச் சொற்களைக் கோத்துப் பாடல் வடிவில் உருவாக்கும்பாடலாசிரியர்கள்இசையமைப்பாளர்கள்பாடகர்கள் இவர்களுக்கிடையே உள்ள உறவை எண்ணிப்பார்ப்பதுண்டுநல்ல மொழியறிவும்மொழிப் புலமையும் கொண்டவராய் இருத்தல்ஓசைபண்(இராகம்), தாளம் போன்ற இசை நுணுக்கங்களைப் பற்றிய அறிவுநல்ல கருத்து வளம்அக்கருத்துகளைக்கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு பொருந்துமாறு எழுத்தில் பாடலாக வடிக்கும் திறன் ஆகியஅனைத்தும் பாடலாசிரியருக்கான இலக்கணம் ஆகும்இவ்வாறு அமைக்கப்பட்ட பாடலை,பாடலாசிரியரின் உள்ளக் கருத்தும்பாடலில் தெரிவிக்கப்படும் உணர்வும் நன்கு வெளிப்படுமாறுஅப்பாடலுக்கு ஏற்ற மெட்டையும் தாளத்தையும் தேர்ந்துபாட்டின் இசையை மக்கள் விரும்பத்தக்கவகையில் அமைக்கும் வல்லமை உடையவராக இருக்க வேண்டும்இறுதியில்இவர்கள் இருவருடையஉள்ளக் கிடக்கைகளையும் புரிந்துகொண்டுபாடலை இனிய குரலில் உச்சரிப்புச் சுத்தமாகப் பாடும்திறன் பாடுபவருக்கு இருக்க வேண்டும்இப்படி மூவகைப் பொருத்தமும் அமைந்த பாடல்களைப்பண்டிதர் முதல் பாமரர் வரை விரும்பிக் கேட்பதைப் பார்க்கலாம்பண்டைய நாளில், ‘கான கலாதரஎன்ற பட்டம் பெற்ற சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் தமிழ் இசையை ரிக்ஷா இழுப்பவர்கள் கூடரசித்துக் கேட்டு மகிழ்வார்கள் எனச் சொல்வார்கள்.

பாட்டுக்கு மெட்டமைப்பது என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தமிழ்த் திரைப்படப்பாடலாசிரியர்கள்இசையமைப்பாளர்கள் ஆகியோர் பற்றிய எண்ணம் தான்முந்தைய காலப்பாடலாசிரியர்களான உடுமலைப்பேட்டை நாராயண கவிமருதகாசிபட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் போன்றவர்களிலிருந்துபின்னர் வந்த கண்ணதாசன்வாலிவைரமுத்துமு.மேத்தா,பா.விஜய் போன்ற பலரும் சிறந்த பாடல்களைப் படைத்து நம்மை மகிழ்விக்கிறார்கள்.இசையமைப்பாளர்கள் என்று எடுத்துக் கொண்டால்இளையராஜாரஹ்மான்கிப்ரான்வித்யாசாகர்,இம்மான்யுவான்பிரகாஷ் போன்ற பலர் நம் நினைவுக்கு வருகின்றனர்இவர்களைப் போலநம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் ஏராளமான பாடலாசிரியர்களும்இசையமைப்பாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக்கட்டுரையில்பண்டைய காலத்துத் தமிழ் மரபில் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும்எவ்வகையான தகுதியும் உறவும் இருந்தன என்று பார்க்கப் போகிறோம்அதற்கு அடித்தளமாகதமிழிசைபற்றிய சில செய்திகளை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

இயல்இசைகூத்து அல்லது நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட தமிழ் மொழியில்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இசை ஒரு மேலான இடத்தை எட்டியிருந்ததென நாம்அறிவோம்இயற்றமிழுக்கான சொல்பொருள்செய்யுள் ஆகியவற்றிற்கான இலக்கணங்களைவரையறுத்த மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில்இசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன (1).இசை எழுத்துக்களின் மாத்திரை அளவுகள்நால்வகை நிலங்களுக்கான பண்கள்தெய்வங்களுக்குரியஇசைபாடல் அமைப்புக்குத் தேவையான எதுகைமோனை வகைகள் போன்ற பல இசைத் தொடர்பானசெய்திகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம்அடுத்தபடியாககடைச்சங்க காலத்தைச் சேர்ந்தபரிபாடலில்புலவர் ஒருவர் இயற்றிய பாடலுக்கு மற்றொருவர் அதற்கேற்ற பண்ணோடு சேர்த்துஇசையமைக்கும் முறை இருந்ததென நாம் காண்கையில்தமிழிசை மிகத் தொன்மையானகாலத்திலேயே பெருமளவில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை அறிந்து நாம் களிப்பெய்துகிறோம்.பரிபாடல் காலத்தில்கடுவன் இளம்வெயினனார்நல்லந்துவனார்மையோடக் கோவனார்குன்றம்பூதனார்இளம்பெருவழுதியார் என இயற்றமிழில் வல்லமை பெற்ற புலவர்களாக இருந்த பலபாடலாசிரியர்களின் பட்டியலைக் கர்நாடக இசைதிரைப்பட இசை ஆகியவற்றில் இயல் தமிழில்தேர்ச்சியுள்ள அண்மைக் காலத்திய பாடலாசிரியர்களின் வரிசையோடு ஒப்பிடலாம்அதுபோலப்பரிபாடலில் கலிப்பா என்னும் பாவகையைச் சார்ந்த கவிதைகளுக்குபித்தாமத்தர்மருத்துவன்நல்லச்சுதனார்கண்ணனாகனார் பெட்டனாகனார்கேசவனார் போன்ற பல இசையமைப்பாளர்களின்பட்டியலும் உள்ளதுகேசவனார் போன்ற சிலர் தாமே கவிஞராகவும் இசையமைப்பாளராகவும்இருந்தனர் என்றும் பார்க்கிறோம்இத்தகைய திறம் படைத்தவர்களைகர்நாடக இசை மரபில்வாக்கேயகாரர்கள் என்று அழைப்பார்கள்இத்துறையில் மூத்தவர்களான தமிழ் மூவர் என்றுஅழைக்கப்படுவோரில்முத்துத் தாண்டவர்மாரிமுத்தா பிள்ளை இருவரும் வாக்கேயகாரர்கள்.அருணாசலக் கவிராயர் பாடல்களுக்கு அவருடைய ஆசான்கள் மெட்டமைத்ததாகத் தெரிகிறதுசங்கீதமும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர்முத்துஸ்வாமி தீக்ஷிதர்சியாமா சாஸ்திரி ஆகியோர்சிறந்த கீர்த்தனங்களை இயற்றுபவர்களாகவும் அவற்றைப் பற்பல இராகங்களிலும் தாளங்களிலும்அமைக்கும் வல்லமை பெற்றவராகவும் இருந்தனர்.   
அடுத்துசிலப்பதிகாரக் காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்தல் எவ்வாறு இருந்ததெனப் பார்ப்போம்.அந்தக் காலகட்டத்தில்தமிழிசை ஓங்கி வளர்ந்து முழுமை பெற்றிருந்தது என்பது அடியார்க்கு நல்லாரின்உரையிலுள்ள குறிப்புகளிலிருந்தும்ஆபிரகாம் பண்டிதர் (2), விபுலானந்தர் (3), எஸ்ராமநாதன் (4),விபுலானந்தரின் மாணவரான வெள்ளைவாரணர் (5) போன்ற அறிஞர்களின் ஆய்விலிருந்தும்தெளிவாகிறதுஅடியார்க்கு நல்லார் தமது உரையில் பாட்டுக்கு மெட்டமைப்பதற்கான வழிமுறைகளைக்கூறும் இசையிலக்கண நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கையில்பாட்டுக்கு மெட்டமைத்தல்என்பது அக்காலத்தில் யாப்பிலக்கண விதிப்படி இயற்றப்பட்ட பாடலுக்கு இசையிலக்கண விதிப்படி ஆற்றப்பட்ட செயலென்று தெரிகிறதுதுரதிஷ்டவசமாகஅத்தகைய விதிகள் கொண்ட இலக்கண நூலாகநமக்குத் தெரிய வருவது அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பிடப்பட்ட பஞ்சமரபு என்னும் நூல் ஒன்றே.இந்நூல் மேலே சுட்டிய ஆய்வாளர்களுக்கு அவர்கள் எழுதிய காலத்தில் கிட்டாமல் இருந்ததுஇந்தநிலைமை 1970-ஆம் ஆண்டளவில்தெய்வசிகாமணிக் கவுண்டர் என்னும் பெரியாரின் அரிய உழைப்பால்மாறியதுமுன்னம் தமிழ்க் கடல் .வே.சாமிநாதையர் செய்தது போல இவரும் பஞ்சமரபு நூலைப் பலஇடங்களில் தேடித் தமக்குக் கிடைத்த பழைய ஓலைச் சுவடிகளிலிருந்த செய்திகளைத் தொகுத்துஅருட்செல்வர்சேலம் நாமகாலிங்கம் அவர்களின் துணையோடு 1973-ல் அதை அச்சேற்றினார்.இந்நூலுக்கு மிக விரிவான உரையை இசைக்கலைச் செல்வர் வீ..காசுந்தரம் அவர்கள் 1973-ல்வெளியிட்டுள்ளார் (6). அதன்படிஅடியார்க்கு நல்லார் முப்பதுக்கும் மேலான பஞ்சமரபு நூற்பாக்களைத்தமது சிலப்பதிகார உரையில்குறிப்பாக அரங்கேற்று காதைஆய்ச்சியர் குரவைப் பகுதிகளில்கையாண்டுள்ளார் என்று அறிகிறோம்சேறை அறிவனார் என்பவர் இயற்றிய இந்நூலில் காணும் இசைபற்றிய தகவல்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றனகுரலிசை மரபுவாத்திய (யாழ்துளைக்கருவி,தோல்கருவி போன்றவைமரபுதாள மரபுநாட்டிய மரபுஅவிநய மரபு என்ற ஐந்து பகுதிகளைக்கொண்ட இந்நூல் இவை ஒவ்வொன்றிற்குமான விதி முறைகளைஉரையோடு கூடிய 241 வெண்பாக்கள்வழியே விவரிக்கிறதுஇசைமரபுப் பகுதியில்குரலொலி எழும்பும் எட்டு இடங்கள்நாடிகள்என்பவைபற்றிய விவரங்களில் தொடங்கிஇசைப்பாடல்களை இயற்றும் முறைஇழைபு என்னும் சொற்சேர்க்கை முறை, சுர அமைப்புஆளத்தி என்னும் ஆலாபனை பாடும் முறைநாட்டியத்திற்குப் பாடும் முறை,ஒவ்வொரு பாடல் வகைக்கும் இசையமைப்பதற்கான விதிகள் என்று பல்வேறு செய்திகள் கொண்டஇசைக் கருவூலமாக உள்ளது பஞ்சமரபு. (பாடுபவர் தம் குரலைப் பாதுகாப்பதற்கான பத்திய முறை,பதப்படுத்தற்கான மருந்து போன்ற செய்திகளைக் கூட இந்நூலில் காணலாம்!). மேலும்ஒவ்வொருஇசைக் கருவியையும் உண்டாக்க எந்த  வகையான மரம் உகந்ததுஎவ்வாறு கருவியை உருவாக்குவதுஎன்ற செய்திகளும், பாடலுக்கேற்பக் கருவியை இசைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளதுஇதுபோல,நாட்டியம் (கூத்துபற்றிய விவரங்களும் ஏராளமாக உள்ளன. (’இலக்கிய வேலைப் படித்துவரும்அன்பர்கள் இந்நூலையும்சிலப்பதிகாரத்தையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டும் என்பது எனதுஅவா.)
பாட்டுக்கு மெட்டமைப்பது பற்றிப் பஞ்சமரபு கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்இந்நூல் சிந்து,திரிபாதம்சவலை, சமபாதம்செந்துறைவெண்டுறைதேவபாணிவண்ணம் ஆகிய இயற்றமிழ்ப்பாவகைகளின் ஓசையை ஒட்டி இசையமைப்பதற்கான இலக்கணத்தை இசைபுணர்த்தல் என்னும் பெயரில் விரிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் வரிப்பாடல்குரவை, வள்ளை,தேவபாணி போன்ற பாடல் வகைகள் பஞ்சமரபின் இலக்கணப்படி அமைந்தவை என அடியார்க்குநல்லார் உரையிலிருந்து நாம் அறிகிறோம். பரிபாடல் காலத்தில் கலிப்பா என்னும் பாவகையைஇசையமைக்கத் தகுந்ததாகத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறதுஇப்பாவினம் தரவுதாழிசைசிற்றெண்,பேரெண்சுரிதகம்அராகம்கொச்சகம்முடுகு என்ற பல செய்யுள் பகுதிகளைக் கொண்டதுஇதற்கும்கர்நாடக இசையமைப்புக்கும் இருக்கக் கூடிய சாத்தியம் பற்றிப் பின்பு காண்போம்.சிலப்பதிகாரத்திற்குப் பின், தமிழ்ப் பாடல் அமைப்பிலும் இசையிலும் ஒரு புரட்சியைக்காரைக்காலம்மையார் (3-ஆம் நூற்றாண்டுசெய்துள்ளார்இவர் முதன்முறையாகத் தரவு கொச்சகக்கலிப்பா வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பான பதிகம் என்ற பாடல் வகையை அறிமுகப்படுத்தினார்மேலும்அப்பாடல்களுக்கு நட்டபாடைஇந்தளம் போன்ற பண்களை அமைத்துப்பண்சுமந்த பாடல்கள் என்னும் மரபை உருவாக்கினார்இதுவே பின்னர் (5-8ஆம் நூற்றாண்டுஎழுந்ததேவாரப் பாடல்களின் அமைப்பிற்கும் இசைக்கும் அடிகோலியதுஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்வியப் பிரபந்தமும் இவ்வகையில் அமைந்ததுஅடுத்து, 15-ஆம் நூற்றாண்டில்திருஞானசம்பந்தர்கையாண்ட வண்ணச்சந்தம் என்னும் விருத்தவகையைப் பெருமளவில் விரிவு படுத்தி அருணகிரிநாதர்ஆயிரக்கணக்கான வண்ணச் சந்தப் பாடல்களை இயற்றித் தமிழிசையில் புதுமை செய்தார் (7)தான,தன்னதத்த என்பன போன்ற பல்வகைச் சந்தங்களின் வரிசையில் (சந்தக் குழிப்பில்அமைந்ததிருப்புகழ்ப் பாடல்களுக்கு வள்ளிமலை சுவாமிகள்சாமி அய்யர்கிருபானந்த வாரியார்,கிருஷ்ணசுவாமி அய்யர்சாதுராம் சுவாமிகள் முன்னரும்.எஸ்.ராகவன் அவர்கள் அண்மையிலும் (8)சந்தக் குழிப்பை ஒட்டி இராகதாளங்கள் அமைத்துள்ளனர். (இங்ஙனம் சந்தக் குழிப்பை முன்வைத்துஇசையமைப்பதைதிரைப்பட இசையில்சிலவேளைகளில் தேவைப்படும் மெட்டுக்கேற்பப் பாட்டுஎழுதும் முறையின் முன்னோடியாகச் சொல்லலாம்.)        

இவ்வாறு படிப்படியாக வளர்ந்த தமிழிசையின் பாடல் அமைப்பும் இசையமைப்பும் 16-ஆம் நூற்றாண்டுக்காலகட்டத்தில்கீர்த்தனம் என்ற புதுவகைப் பாடல் அமைப்பால் வேறொரு திசைநோக்கிச் செல்லத்தொடங்கினஇந்தப் பாடல் அமைப்பிற்குவடமொழியில் சாரங்க தேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம்என்னும் தமிழ்ப் பண்களின் அடிப்படையில் எழுந்த இசை நூலும்வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அமைப்பும் அடிப்படையானவை எனக் கருதுவர்இதன் விளைவே தற்போதைய கர்நாடக சங்கீதம் எனநம்பப்படுகிறதுதிருஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகமே கமக அமைப்பிற்கும்வீணையின் பயன்பாட்டிற்கும்இவற்றின் விளைவாகக் கர்நாடக இசையின் ராகங்களின் தோற்றத்திற்கும் வித்திட்டதுஎன்ற கருத்தும் எழுப்பப்பட்டுள்ளது (8)   முத்துத்தாண்டவர் (1525 – 1600) முதன் முறையாகத் தமிழில்பல்லவிஅநுபல்லவிசரணம் என்ற அமைப்புக் கொண்ட கீர்த்தனங்களை இயற்றி ராகதாளங்களோடுசேர்த்துப் பாடும் வகையில் வழங்கினார்இவருக்குச் சற்றே முந்திய காலத்தில்தெலுங்கில்அன்னமாச்சாரியா (1408-1503), கன்னடத்தில் புரந்தரதாசர் [1484–1564] ஆகியோர் கீர்த்தன வடிவில்பாடல்கள் அமைத்துப் பாடியிருந்தனர்தொடர்ந்து தமிழில்மாரிமுத்தா பிள்ளை (1712-1787), அருணாசலக்கவிராயர் (1712-1779), ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் (1700, 1765) ஆகியோரும் கீர்த்தன வடிவில் பாடல்கள்அமைத்துப் பாடினர்பின்னர்சங்கீத மும்மூர்த்திகள் தெலுங்குசம்ஸ்கிருத மொழிகளிலும்பாபநாசம்சிவன்பெ.தூரன்அம்புஜம் கிருஷ்ணா ஆகியோரும் இன்னும் பலரும் தமிழ்க் கீர்த்தனப் பட்டியலைவிரிவுபடுத்தினர்இப்போது நடைபெறும் கச்சேரிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கீர்த்தனம் என்றபாடல் அமைப்பின் அஸ்திவாரம் எது என்பது பற்றிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது (9,10).ஒத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசைஅராகம் முடுகு போன்ற உறுப்புகள் கர்நாடக இசையின் பல்லவி,அநுபல்லவிசரணம்மத்தியம காலப் பகுதி ஆகியவற்றின் மூலங்களாக இருக்க வாய்ப்புள்ளது என்றகருத்து முன்வைக்கப்பட்டுள்ளது (9); இது இசையறிஞர்களால் மேலும் ஆராயத்தக்கதுகீர்த்தனம் தவிர,தான வர்ணம்பதவர்ணம்தில்லானா போன்ற வடிவங்களும் சுரம்தாளத்துடன் மெட்டமைத்துஇயற்றப்பட்டுள்ளன (9).
தற்கால இசைக் கலைஞர்கள் தமிழிசையின் பெருமையை உணர்ந்து அதைப் பரப்பி வருவது நமக்குமகிழ்ச்சியைத் தருகிறதுமறைந்த பத்மபூஷண் எம்.எஸ்சுப்புலக்ஷ்மி அவர்கள்கலிப்பாவின் தாழிசைஅமைப்புக் கொண்ட சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவைப் பாடலை இராகமாலிகையாகஇசையமைத்துப் பாடியது போல (11), பரிபாடல் போன்ற மற்ற சங்க காலப் பாடல்களுக்கும் இசை,நாட்டிய அமைப்புகளை இசைவல்லுநர்கள்தமிழிசை இலக்கண விதிகளை ஒட்டி அமைப்பார்கள் என்றுஎதிர்பார்ப்போம்.    

மேற்கோள் நூல்கள்:
1. வீ..காசுந்தரம் (1994) தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.
2. ஆபிரகாம் பண்டிதர் (1917, ’கருணாமிர்த சாகரம்’, மறுபதிப்பு:http://www.tamilvu.org/library/l9800/html/l9800bod.htm
3, விபுலானந்தர் (1974), ‘யாழ் நூல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கம்தஞ்சாவூர்(http://noolaham.net/project/181/18040/18040.pdf)
4. எஸ்ராமநாதன் (1981), ‘சிலப்பதிகாரத்து இசைத் தமிழ்’  தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்,சென்னை.  
5. வெள்ளைவாரணர்(1979) ’இசைத் தமிழ் ராமகிருஷ்ண வித்யாசாலைசிதம்பரம்.
6. வீ..காசுந்தரம் (1991) ‘சேறை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு” கழக வெளியீடுசென்னை.
7. வே.அனந்தநாராயணன் (, ‘புரட்சிக் கவிஞர் அருணகிரிநாதர்http://www.kaumaram.com/arasu/anantha_narayanan_01_u.html
8. தியாகராஜன், (1997) ’இசைத் தமிழின் உண்மை வரலாறு’ விவேகானந்தா அச்சகம்மதுரை.
9. கௌசுப்பிரமணியன் (2017) ) ‘தமிழில் இசைப்பாடல் வகைகள்) ’இசைத்தமிழ்ச் சிந்தனைகள்’,குமரன் புத்தக இல்லம்கொழும்பு-சென்னை.
10. ஜெயமோகன் (2014) ’கர்நாடக இசை – சுருக்கமான வரலாறு’ http://www.jeyamohan.in/55397#.WgpAh2hSy70
11. எம்.எஸ்சுப்புலக்ஷ்மிhttps://www.youtube.com/watch?v=ogm5odfetE4