Monday, August 7, 2017

         வைகுண்டக் குடும்பம்
         
                ***************
               
பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது

ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்

பார்த்தஅன்னை கையில்அவன் காது!

                ***************

கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு

கல்விகற்கும் காலமெல்லாம்
கண்டபடி போக்கினாலும்

கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு -அது

கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!