Tuesday, February 11, 2025

 <>  மன வண்டு  <>


தனதனன தனதான தனதனன தனதான

தனதனன தனதான தனதான



விடியுமொரு தனிநேர மெழுருண நிறமேவு

...விமலமுக மெனுமாறு கதிர்நாடி

 

டியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி 

...னுதினமும் வரநீயு மவர்காண

 

கடிபுரவி யெனவோடு கனகமயி லதன்மீது

...கையிலமரு மயிலோடு வருவேளை

 

வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேயென்

..மனமெனுமொ ரறுகால்சென்  றுறையாதோ?


.                        ....அனந்த்


                        11-2-2025

No comments: